புரிந்து கொள்வாய் என்றுதான் 
பிரிந்து சென்றேன், 
பாலை வானக் குயிலாய் - நீ 
பருதவிப்பாய் என அறியாமல். 

நீயும், நானும் எதிரெதிர் திசையில் 
ஏங்கியெங்கித் தவிக்கையிலே 
நினைவுகள் இடையிடையே 
கனவுகள் வந்து மறைக்கின்றதே.... 

நீயோ..............! 
தாடிவைத்துக் காட்டுகின்றாய் 
உன் சோகத்தை,... 
மூடிவைத்து தவிக்கின்றேன் 
எனது தாக்கத்தை... 

விலக்கிச் சென்ற என் காதலனே..! 
கட்டிய கணவனோடு 
கட்டிலறை சென்றாலும் 
ஊஞ்சல் கட்டியாடுதடா 
உன் நினைவு.

விண்ணைத்தாண்டி இன்று
விளையாட வந்தவளே..!
என்னைத்தாண்டி ஏனடி
வெகுதூரம் செல்கின்றாய்..?

 நினைவஞ்சலி
*******************
நினைவோடுதான் நிறுத்தி வைத்தேன் 
கனவோடு நீயும் கலைந்ததென்ன..? 

இறுதிக் கடிதம் கண்டவுடன்
இறுக்கி மூடிய கண்களுக்குள்

மெல்லக் கசியும் கண்ணீரை

நீ.......
காட்டிக் கொண்ட அன்பினால்
நான்,
மூட்டிக் கொண்டேன் காதலை,

சாய உதட்டில்
காயமூட்டி
சூடான இதழில்
குளிர் பாச்சி