-புரிந்து கொள்வாயா?-

Author வை.கே.ராஜூ - -
Home » -புரிந்து கொள்வாயா?-

புரிந்து கொள்வாய் என்றுதான் 
பிரிந்து சென்றேன், 
பாலை வானக் குயிலாய் - நீ 
பருதவிப்பாய் என அறியாமல். 

நீயும், நானும் எதிரெதிர் திசையில் 
ஏங்கியெங்கித் தவிக்கையிலே 
நினைவுகள் இடையிடையே 
கனவுகள் வந்து மறைக்கின்றதே.... 

நீயோ..............! 
தாடிவைத்துக் காட்டுகின்றாய் 
உன் சோகத்தை,... 
மூடிவைத்து தவிக்கின்றேன் 
எனது தாக்கத்தை... 

விலக்கிச் சென்ற என் காதலனே..! 
கட்டிய கணவனோடு 
கட்டிலறை சென்றாலும் 
ஊஞ்சல் கட்டியாடுதடா 
உன் நினைவு.