Archive for பிப்ரவரி 2013

புரிந்து கொள்வாய் என்றுதான் 
பிரிந்து சென்றேன், 
பாலை வானக் குயிலாய் - நீ 
பருதவிப்பாய் என அறியாமல். 

நீயும், நானும் எதிரெதிர் திசையில் 
ஏங்கியெங்கித் தவிக்கையிலே 
நினைவுகள் இடையிடையே 
கனவுகள் வந்து மறைக்கின்றதே.... 

நீயோ..............! 
தாடிவைத்துக் காட்டுகின்றாய் 
உன் சோகத்தை,... 
மூடிவைத்து தவிக்கின்றேன் 
எனது தாக்கத்தை... 

விலக்கிச் சென்ற என் காதலனே..! 
கட்டிய கணவனோடு 
கட்டிலறை சென்றாலும் 
ஊஞ்சல் கட்டியாடுதடா 
உன் நினைவு.

விண்ணைத்தாண்டி இன்று
விளையாட வந்தவளே..!
என்னைத்தாண்டி ஏனடி
வெகுதூரம் செல்கின்றாய்..?

 நினைவஞ்சலி
*******************
நினைவோடுதான் நிறுத்தி வைத்தேன் 
கனவோடு நீயும் கலைந்ததென்ன..? 

இறுதிக் கடிதம் கண்டவுடன்
இறுக்கி மூடிய கண்களுக்குள்

மெல்லக் கசியும் கண்ணீரை

நீ.......
காட்டிக் கொண்ட அன்பினால்
நான்,
மூட்டிக் கொண்டேன் காதலை,

சாய உதட்டில்
காயமூட்டி
சூடான இதழில்
குளிர் பாச்சி

கண்களில் கரைந்து,
மனதினுள் இணைந்து,
உணர்புகள் படிந்து,
உயிரினில் சுரந்து,

என்னை நோக்கிய இளம் தென்றல்
இதமாய் இதயம் நுழைந்ததினால்,
இன்னிசை ராகம்
எனக்குள் ஒலிக்கின்றது....


ஆயிரம் மின் விளக்குகள்
உன் கண்ணொளியிலே,
பௌர்ணமி நிலவொளியோ,
உன் முக அழகினிலே...

எனக்காகப் பிறந்தவளே,
என் தேனிலவே...!
இதயத்தில் ஒளிரும்
பால் முகமே..!

பிறந்து விட்டாய் பெண்ணாக..
பூமியிலே எனக்காக,
செவ்விதழ் வாயோடு,
செதுக்கி வைத்த சிலையாக,


உன் 
விழிப் பார்வை 
புரியாமல்தான்
விழுந்து கிடக்கின்றேன்
விதியென்னும்
குழிக்குள்ளே.!



என் இதயக் கிழிசல்களை
தைத்துக் கொண்டிருக்கின்றேன்,
இன்னொரு இதயத்தின் உதவியோடு,
காதலின்றி


என்னை மறந்து விடு என
தினமும்
மறக்காமல் சொல்லும் உன்னை
எப்படி மறப்பது நான்.


உன்னை மறக்கும் நொடியே
இறக்க வேண்டும்.
இறந்த பின்பும்
இதயம் துடிக்க வேண்டும்.
துடிக்கும் இதயம்
உன் பெயர் அழைக்கவேண்டும்,
அழைக்கும் குரலோ
ஜெலியாக இனிக்க வேண்டும்.

Y.K.Raju



என் இதயப் பூங்காவுக்குள்
எனக்காய் நுழைந்த சாரளவள். 
இதழ்களை உரசி
இன்பம் வார்க்கும் தூறளவள். 
செவிகளில் தேனைவார்த்து 
ராகம் சேர்க்கும் தேனியவள், 
தேவலோகப் பெண்ணாக
பூமி வந்த தேவதையிவள்.